குடும்பத்தை நடத்துவதில் ஆடவர்கள் விவேகியாகவும், பெண்கள் அவிவிவேகியாகவும் இருக்கலாமா? உடம்பின் இரண்டு கண்களில் ஒன்று பார்வைக்கு உதவாதபடி இருக்கும்தன்மையைப் போன்று இது அமைந்துள்ளது நன்மை தருமா? குடும்பக்காரியத்தையும், குழந்தைகளை வளர்க்க வேண்டியதையும் மேன்மையாய்க் கொண்டு போவதற்கு இவ்வேறுபாடு தடையாக உள்ளதை மனித சமூக நலம் பேணுவோரால் ஏற்றுக் கொள்ள முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’