தண்ணீரில் கிடைக்கும் தங்கத் துகள்கள்

viduthalai
1 Min Read

இந்தியாவில் ஏராளமான ஆறுகள் உள்ளன. அவை பலரின் வாழ்வாதாரத்திற்கான முக்கிய ஆதாரங்களாக உள்ளன. குறிப்பாக விவசாயிகள் பாசனத்திற்காக அதனை நம்பியுள்ளனர், அதுமட்டுமல்லாமல் தங்களது அன்றாட தேவைகளுக்காக நதிநீரை நம்பியுள்ளனர்.

கங்கை, துர்கா, யமுனா, கிருஷ்ணா, கோதாவரி போன்ற ஆறுகள் விவசாயத்திற்கும், வாழ்வாதாரத்திற்கும் முக்கியத்துவமாக உள்ளன.

ஆனால் நதி நீரில் தங்கம் பாய்ந்தால் எப்படி இருக்கும்? ஆம், இந்த நதி நீரில் மக்கள் காலை முதல் மாலை வரை தங்கத் துகள்களை சேகரித்து வருகின்றனர். அரிசியை விட சிறிய அளவிலான 60 முதல் 80 தங்க உருண்டைகள், நாளொன்றுக்கு இந்த பகுதியில் கிடைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுபர்ணரேகா நதி ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா வழியாக பாய்கிறது. இந்த நதி தண்ணீருடன் தங்கத் துகள்களை எடுத்துச் செல்கிறது.

இந்த தனித்துவமான அம்சத்தைக் காண தொலைதூரத்தில் இருந்து மக்கள் வருகை தருகின்றனர். எப்படி நதிநீரில் தங்கத் துகள்கள் இருக்கும் என்று பலரும் ஆச்சரியமாக கேட்கலாம். இந்த நதி கனிம வளங்கள் மிக்க நதி என்று புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாறைகள் வழியாக செல்லும் இந்த நதிநீர் உராய்வதால் சிறிய தங்க துகள்களை வெளியிடுகின்றன. பின்னர் அவை கரைந்து நீரோட்டத்துடன் நகருகின்றன. அறிவியல் ரீதியாக இந்த செயல்முறை முற்றிலும் இயற்கையானது என்று புவியியலாளர்கள் கூறுகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *