சி.இராமாயி அம்மாள் மறைவு! கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

1 Min Read

அரசியல்

திருவண்ணாமலை, ஜூலை 2 – திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சி.மூர்த்தியின் தாயார் மறைந்த சி.இராமாயி அம்மாள் உடலுக்கு கழகத்தின் சார்பில் மாவட்ட கழகக் காப்பாளர் வேட் டவலம் பி.பட்டாபிராமன் தலைமையில் 30.6.2023 அன்று கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத்தி, அவர்தம் குடும்பத்தின ருக்கு இரங்கலையும், ஆறு தலையும் தெரிவித்த னர். 

தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமார தேவன், திருவண்ணா மலை மாவட்டச் செயலாளர் ராம்குமார், அமைப்பாளர் காமராஜ்,  மாவட்ட துணைத் தலைவர் சா.கிருட்டிணன், செங்கை மாவட்ட தலை வர் சுந்தரம், திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், போளூர் ப.அண்ணாதாசன், கீழ்க்கச்சிராப்பட்டு தேவராஜ், வேட்டவலம் நகரத் தலைவர் ஏழுமலை, பகுத்தறிவாளர் கழகம் பழனி, ப.அறிவரசு, இளை ஞரணி இரா.திருமலை, முன்னூர்மங்கலம் பழனி, செங்கம் கழகத் தலைவர் கு.ராமன், மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி தலைவர் கமலக்கண்ணன், இராமஜெயம்  மற் றும் கழகப் பொறுப்பா ளர்கள், சமூக சேவகர் இரா.தண்டராஜ், தலித் விடுதலை இயக்க இளைஞரணி மாநில செயலாளர் என்.ஏ.கிச்சா சரவணன் உள்பட பலர் மறைந்த சி.இராமாயி அம்மாள் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *