சென்னை, ஏப்.23– காஷ் மீரில் நடைபெற்ற பயங்கர வாத தாக்குதலில் பாதிக்கப் பட்டு உள்ள தமிழர் களுக்கு உதவுவதற்காக தமிழ் நாடு அதிகாரி காஷ்மீர் சென்று மீட்புப்பணிகளை மேற் கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழர்கள் படுகாயம்
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று (22.4.2025) வெளி யிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது
ஜம்மு-காஷ்மீர் அனந்த் நாக் மாவட்டத்தில் பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் தமிழர்களான மருத்துவர் பரமேசுவரன் (சென்னை), சந்துரு (வயது 83), பாலச்சந்திரா (37) ஆகிய 3 பேர் படுகாயம் அடைத்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தகவலை கேள்விப்பட்டவுடன், பயங்கர வாதிகளால் தாக்குத லுக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக முதல்கட்டமாக அவர்களுக்கு தொடர்பு கொள்ள ஏதுவாக டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மய்யம் தொடங்க உத்தரவிட்டு உள்ளார்கள். அதன் அடிப்படையில் உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300 (தொலை பேசி எண்) 9289516712 ( அலைபேசி மற்றும் வாட்ஸ் அப் எண்) என்ற எண்களில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் மாவட்ட ஆட்சியர் விரைந்தார்
முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவின் பேரில், 24 மணி நேரமும் செயல்படும் உதவி மய்யம் அப்பகுதி மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நட வடிக்கைகள் மேற்கொள்ளும். இதற்காக டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையாளர் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங் கிணைந்து மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுக் கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூலை நேரடியாக ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், தேவை யான மருத்துவ வசதிகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.