சென்னை, ஏப்.23 ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணை யம் (யுபிஎஸ்சி) நடத்திய 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டளவில் சிவச்சந்திரன் முதலிடம் பெற்றார்.
தேர்ச்சி பெற்ற 57 தமிழ்நாடு மாணவர்களில் 50 பேர் “நான் முதல்வன்’ திட் டத்தில் ஊக்கத் தொகை யைப் பெற்ற பயனாளிகள் ஆவர். முதலிடம் பெற்ற மாணவர் சிவச்சந்திரன் உள்பட 18 பேர் “நான் முதல்வன்’ திட்டத்தின் பயிற்சி மய்யத்தில் தேர் வுக்குத் தயாரானது குறிப் பிடத்தக்கது.
முதல் 50-இல் 5 தமிழ்நாடு மாணவர்கள்
அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களில் 5 தமிழ்நாடு மாணவர்கள் இடம் பெற்றனர்.
மாணவர்கள் பி.சிவச் சந்திரன் மற்றும் ஏ.எஸ்.ஜி.ஜி. முறையே அகில இந்தியத் தரவரிசையில் 23, 25-ஆவது இடத்தைப் பெற்றனர். மாணவர்கள் சுபாஷ் கார்த்திக், ஆர்.மோனிகா, பி.பவித்ரா ஆகியோர் முறையே 29, 39, 42-ஆவது இடத்தைப் பெற்றனர்.
தமிழில் தேர்வெழுதிய இருவர் தேர்ச்சி
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த பி.காமராஜ் (29), எஸ்.சங்கர் பாண்டியராஜ் (30) ஆகியோர் யுபிஎஸ்சி தேர்வை தமிழில் எழுதித் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மாணவர்கள் சிலர் தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள மய்யங் களையும் தேர்வு எழுதத் தேர்ந்தெடுத்ததால், நிகழாண்டு தேர்ச்சி அடைந்த தமிழ்நாடு மாணவர்களின் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர்
ஸ்டாலின் பாராட்டு
“நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்று குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்ற சிவச்சந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வாழ்த்து தெரிவித் துள்ளார்.