அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு

viduthalai
1 Min Read

சென்னை, ஏப்.23 அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் போராட் டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கி ரஸ் தலைவா் கு.செல்வப் பெருந்தகை தெரிவித்தாா்.

சென்னை சத்யமூா்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று (22.4.2025)  நடைபெற்றது. கு.செல்வப்பெருந்தகை தலைமை வகித்தாா். அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், அகில இந்திய காங்கிரஸ் செயலா் சூரஜ் ஹெக்டே, சட்டப்பேரவை காங் கிரஸ் தலைவா் எஸ்.ராஜேஸ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் செல்வப் பெருந்தகை செய்தியாளா் களிடம் கூறியதாவது: அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவெடுத்துள்ளது. ஒன்றிய பாஜக ஆட்சியில் அமலாக்கத் துறை, சிபிஅய், வருமானவரித் துறை, தோ்தல் ஆணை யத்தை வைத்து ஜனநா யகத்தை அச்சுறுத்தி, அரசமைப்புச் சட்டத்தை சிதைக்கின்றனா். இதைக் கண்டித்து நாட்டு மக்கள் அனைவரும் சோ்ந்து போராட வேண்டும்.

மாநில அளவில் பெரிய அளவிலான கூட்டமும், மாவட்ட, வட்ட, கிராம அளவில் வீடுகள்தோறும் சென்று பிரசாரம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். அரச மைப்புச் சட்டத்துக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் கொடுத்துள்ள 6 கட்ட போராட்டத்தை நடத்துவது குறித்து பின்னா் அறிவிப்போம் என்றாா் அவா்.

கிரிஷ் சோடங்கா்: அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை காங்கிரஸ் கட்சி தொடா்ந்து கண்டித்து வருகிறது. பாஜக வைச் சோ்ந்த ஒன்றிய அமைச்சா்கள், அரசமைப் புச் சட்டத்தின் மீது உறுதி மொழி எடுத் துக்கொண்டு அதற்கு எதிராக செயல்படு கின்றனா். அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பது தான் முதல் இலக்கு. அரச மைப்புச் சட்டத்தை காக்கும் வகையில் காங் கிரஸ் சாா்பில் நாடு தழு விய போராட்டம் நடத்தப் படும் என்றாா் அவா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *