ரயில்வேயில் லோகோ பைலட் பணி

1 Min Read

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) உதவி லோகோ பைலட் (ALP) பதவிகளை நிரப்ப ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. RRB ALP ஆட்சேர்ப்பு 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தற்போது காலியாகவுள்ள 9970 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரயில்வே பணியாளர் தேர்வு

ரயில்வே துறையில் லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநர் பணி, எண்ணற்ற இளைஞர்களின் கனவுப் பணியாக விளங்குகிறது. இந்த முக்கிய பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. உதவி லோகோ பைலட் பணிக்கான 9,970 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, தேர்வு முறை எப்படி இருக்கும், ஊதியம் எவ்வளவு, வயது வரம்பு என்ன, விண்ணப்பிக்கும் முறை என்ன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.
துறைகள்: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
காலியிடங்கள்: 9,970
பணிகள்: உதவி லோகோ பைலட் (ALP)
விண்ணப்பிக்கும் முறை: இணையம் மூலம்
கடைசி தேதி: 11.05.2025
பணியிடம்: தமிழ்நாடு மற்றும்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.rrbapply.gov.in/

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *