பட்டப்படிப்பு போதும்! சென்னை அய்அய்டியில் பணிவாய்ப்பு

viduthalai
2 Min Read

சென்னை அய்அய்டி-யில் ஆசிரியர்கள் அல்லாத பிரிவுகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நூலகர், தலைமை பாதுகாப்பு அதிகாரி, டெபியூட்டி பதிவாளர், டெக்னிஷிக்கல் அதிகாரி, உதவி பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது. மேலும், குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பதவிகளுக்கு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

சென்னை அய்அய்டி-யில் ஆசிரியர்கள் அல்லாத பிரிவுகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப்-ஏ, குரூப்-பி மற்றும் குரூப்-சி பிரிவுகளில் பல்வேறு பதவிகளுக்கு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

குரூப்-ஏ பதவிகள்

நூலகர்: 1

தலைமை பாதுகாப்பு அதிகாரி: 1

டெபியூட்டி பதிவாளர்: 2

டெக்னிக்கல் அதிகாரி: 1

உதவி பதிவாளர்: 2

குரூப்-பி பதவிகள்

ஜூனியர் டெக்னிக்கல் சூப்பரிண் டெண்டண்ட்: 1

ஜூனியர் சூப்பரிண்டெண்டண்ட்: 5

குரூப்-சி பதவிகள்

ஜூனியர் உதவியாளர்: 10

மொத்தம்: 23

வயது வரம்பு: நூலகர், தலைமை பாதுகாப்பு அதிகாரி மற்றும் டெபியூட்டி பதிவாளர் பதவிகளுக்கு அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.

டெக்னிக்கல் அதிகாரி, உதவி பதிவாளர் பதவிக்கு அதிகபடியாக 45 வயது வரை இருக்கலாம். ஜூனியர் டெக்னிக்கல் சூப்ப ரிண்டெண்டண்ட், ஜூனியர் சூப்பரிண் டெண்டண்ட் பதவிகளுக்கு அதிகபடியாக 32 வயது வரை இருக்கலாம்.

ஜூனியர் உதவியாளர் பதவிக்கு அதிகபடியாக 27 வயது வரை இருக்கலாம்.

கல்வித் தகுதி:சென்னை அய்அய்டி-யில் உள்ள ஆசிரியர் அல்லாத பதவிகளுக்கு இளங்கலை அல்லது முதுகலை பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். முழுமையான கல்வித்தகுதியை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.

ஊதிய விவரம்:இப்பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் நிலை-3 முதல் நிலை -12 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நபர்களுக்கு எழுத்துத் தேர்வு/ திறன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : சென்னை அய்அய்டி-யில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://recruit.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் தொடங்கும் நாள்: 19.04.2025.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.05.2025

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *