டெக்கான் கிரானிக்கல், சென்னை:
< தமிழ்நாடு ஆளுநருக்கு பிறப்பித்த உத்தரவு கேரளா அரசுக்கும் பொருந்துமா என்று பரிசீலனை: உச்ச நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை. ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”தமிழ்நாடு வழக்கின் சாராம்சங்கள் வேறு என்பதால், மசோதா விவகாரத்தில் கேரளா அரசு தொடர்ந்த வழக்கிற்கு அது கண்டிப்பாக பொருந்தாது. எனவே அம்மாநில கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்த நிலையில் நீதிபதிகள் பதில்.
< ஊட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டும் துணைவேந்தர்கள் மாநாடு; அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
< அரசின் மானிய தொகையான 2.2 பில்லியன் டாலரை நிறுத்திய டிரம்ப் அரசுக்கு எதிராக ஹார்வார்ட் பல்கலைக்கழகம் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு.
< எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு பணிந்தது பட்னாவிஸ் அரசு; 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடம் உத்தரவை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிரா அரசு: திருத்தப்பட்ட ஆணை வெளியிடப்படும்; கல்வி அமைச்சர் அறிவிப்பு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ராகுல் காந்தி, சோனியா காந்தி கடும் கண்டனம். ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், காஷ்மீரில் அமைதி நிலவுவதாக இனியாவது வெற்று அறிக்கைகள் வெளியிடாமல், ஒன்றிய அரசு நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ராகுல் வலியுறுத்தல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< “தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மூன்றாவது மொழியாக மகாராஷ்டிராவில் மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை” என்ற பட்னாவிஸின் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா என்பதை பிரதமர் நரேந்திர மோடியும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் தெளிவுபடுத்த வேண்டும் என்றார் மு.க. ஸ்டாலின் கேள்வி.
தி இந்து:
< நீதித்துறையை மிரட்டும் முயற்சிகள் ஜனநாயகத் திற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. சட்டமன்றத் தால் இயற்றப்பட்ட சட்டங்களின் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் செயல்படுவதற்கான காலக் கெடுவை நிர்ணயித்த சமீபத்திய தீர்ப்பில், தேர்ந் தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் மீட்டெடுத்தது. நீதித்துறையை விமர்சிப்பவர்கள் இந்த விடயத்தை முற்றிலுமாக தவறவிடுகிறார்கள் என்கிறது ஹிந்து பத்திரிக்கையின் தலையங்கம்.
< நீதிக் கட்சிக்கு இறுதி என்பதே கிடையாது; நீதிக் கட்சியின் நீட்சிதான் திமுக என்று திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
– குடந்தை கருணா