வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் பெரம்பூரில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடத்த முடிவு

viduthalai
2 Min Read

வடசென்னை, ஏப். 23- வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 20.4.2025 அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை பெரியார் திடல் அன்னை நாகம்மையார் அரங்க த்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் நா.பார்த்திபன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். திராவிட மகளிர் பாசறை த.மரகதமணி கடவுள் மறுப்புக் கூறினார்.

கழகப் பணிகள் பற்றி…

கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், மாநில கழக இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும் பொன் ஆகியோர் மாவட்ட கழக ஆக்கப் பணிகள் குறித்து உரையாற்றினர்.

மாவட்ட காப்பாளர் கி.இராம லிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன, தங்க.தனலட்சுமி, அமைப்பாளர் சி.பாசுகர், கொடுங்கையூர் கழகத் தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் கழக தலைவர் ப.கோபாலகிருட்டினன், எருக்கமாநகர் கழக அமைப்பாளர் சொ.அன்பு, மங்களபுரம் கழக அமைப்பாளர் மா.டில்லிபாபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.கார்த்திக், மாவட்ட மாணவர் கழகத் தவைர் செயலாளர் அ.புகழேந்தி, ச.சஞ்சய், க.செல்லப்பன், அ.செந்தமிழ்தாசன், த.இளவரசி, பா.நதியா, யாழ்தமிழ் ஆகியோர் கலந்து கொண்டு கழக செயல்பாடுகள் குறித்துக் கூறினர்.

தீர்மானங்கள்

சிதம்பரம் – கழகப் பொதுக் குழுவின் தீர்மானங்களை செயலாக் குவதெனவும், புதிய கிளைக் கழ கங்கள் அமைப்பதெனவும், அய்ந்து தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்திய மாவட்ட கழகத் தோழர்களின் ஒருங் கிணைந்த பணிகட்குப் பாராட்டுத் தெரிவித்தும், தெருமுனைப் பிரச் சாரக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துவதெனவும், ஒரு நாள் பயிற்சி முகாம்களை வாய்ப்புள்ள பகுதிகளில் மாவட்ட கழகத்தின் சார்பில் நடத்துவதெனவும் தீர் மானிக்கப்பட்டது.

பெரம்பூரில் பொதுக்கூட்டம்

24.4.2025 அன்று, பெரம்பூர் பழனி ஆண்டவர் கோவில் தெருவில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், தி.மு.க. செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ள அண்ணல் அம்பேத்கர் 135ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தை எழுச்சியோடு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

நிறைவாக மாவட்ட துணைச் செயலாளர் வ.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *