அரசமலையில் கழகப் பிரச்சாரப் பொதுக்கூட்டம்

1 Min Read

 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்துள்ள அரசமலையில் 23.4.2025 அன்று மாலை 5.30மணி அளவில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் வரலாற்றுச் சாதனைகளுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

ப.க.மாவட்ட துணைச் செயலாளர் பி.தாமோதரன். தலைமையேற்க, ப.க.ஆசிரியரணி இரா.வெள்ளைச்சாமி வரவேற்புரையாற்ற, ப.க.மாநில அமைப்பாளர் அ.சரவணன். அறிமுகவுரையாற்ற, கழகப் பேச்சாளர் பூவை.புலிகேசி சிறப்புரையாற்றுகிறார். .நிகழ்ச்சி ஏற்பாடு: பொன்னமராவதி பகுத்தறிவாளர் கழகம். அனைவரும் வருக.

– – – – –

புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் 29.4.2025 அன்று மாலை 5.30மணி அளவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 134ஆவது பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் வரலாற்றுச் சாதனைகளுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

தலைமை: ப.க.மாவட்டத் தலைவர் அ.தர்மசேகர். வரவேற்புரை: ப.க.மாவட்டச் செயலாளர் இரா.மலர்மன்னன். அறிமுகவுரை ப.க.மாநில அமைப்பாளர் அ.சரவணன். தொடக்கவுரை: திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன். சிறப்புரை: கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன். நிகழ்ச்சி ஏற்பாடு பகுத்தறிவாளர் கழகம் புதுக்கோட்டை. அனைவரும் வருக.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *