புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 61 ஆம் நினைவு நாள் கடைப்பிடிக்கப் பட்டது.
நேற்று (21.4.2025) காலை சட்டப் பேரவை அருகிலுள்ள புரட்சிக் கவிஞர் சிலைக்கு புதுவை மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் வே, அன்பரசன், மாவட்டச் செயலாளர் தி. இராசா, துணைத் தலைவர் மு.குப்புசாமி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ.சிவராசன், தொழிலாளரணிச் செயலாளர் கே. குமார், திராவிடர் கழக நகராட்சி கொம்யூன் பொறுப்பாளர்கள் செ.இளங்கோவன், மு.ஆறுமுகம், களஞ்சியம் வெங்கடேசன், எஸ் கிருஷ்ணசாமி, ஊடகவியலாளர் பெ.ஆதிநாராயணன், முகமது நிசாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்