எனது பற்று எதன் மீது?
குணத்திற்காகவும், அக்குணத்தில் ஏற்படும் நற்பயனுக்காகவும் தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக் கூடும். எனது பாஷை, எனது தேசம், எனது மதம் என்பதற்காகவோ, பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை. எனது நாடு எனது இலட்சியத்திற்கு உதவாது என்று கருதினால் -உதவும்படி செய்ய முடியாது என்று கருதினால், உடனே விட்டு விட்டுப் போய் விடுவேன்.
(பெரியார் 99ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.103)