ஓட்டல் மேலாண்மைப் படிப்பு ஜே.இ.இ. தேர்வு மய்ய விவரம் வெளியீடு!

1 Min Read

சென்னை, ஏப். 22- ஓட்டல் மேலாண்மை உணவு தொழில்நுட்ப இளநிலை படிப்புக்கான (ஜேஇஇ) நுழைவுத் தோ்வு மய்யங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய ஓட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இயங்கும் 78 கல்வி மய்யங்களில் பிஎஸ்சி விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் நிர்வாகப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில், சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (என்சிஎச்எம் ஜேஇஇ) தோ்ச்சி பெற வேண்டும்.

இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தோ்வு இணைய வழியே ஏப். 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான இணைய விண்ணப் பப் பதிவு கடந்த ஆண்டு டிச. 16-இல் தொடங்கி பிப். 28-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் தோ்வு மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை இணையதளத்தில் சென்று மாணவா்கள் அறியலாம். தோ்வுக்கான அனுமதிச் சீட்டு விரைவில் வெளியிடப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு இணையதளம் அல்லது 01140759000/ 69227700 என்ற தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரியை தொடா்பு கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *