புரட்சிக்கவிஞர் பிறந்த நாளையொட்டி (ஏப்.29) தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்படும்!

1 Min Read

சட்டப்பேரவையில் முதலமைச்சரின் அறிவிப்பை உச்சிமோந்து வரவேற்கிறோம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் வரவேற்று, பாராட்டு அறிக்கை!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி (ஏப்ரல் 29) தமிழ் வார விழாவாகக் (ஏப்.29 தேதி முதல் மே 5 ஆம் தேதிவரை) கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ள நமது சமூகநீதி காத்த சரித்திர நாயகர் மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, நாம் உச்சிமோந்து, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறோம்.

திராவிடர் இயக்க ஆட்சி வரலாற்றில் இது ஓர் இணையற்ற புதிய பொன்னேடு. உலகம் முழுவதும் உள்ள தமிழ் உணர்வாளர்களின் பெருவிருப்பத்தைச் சிறப்பாக நிறைவேற்ற விதி 110–இன்கீழ் அறிவித்த நமது இணையற்ற முதலமைச்சரைப் பாராட்டி, வரவேற்று, நன்றி செலுத்தி வாழ்த்துவார்கள் என்பது திண்ணம்.
இந்நாள் (22.4.2025) ஓர் இனிய, வரலாற்றுச் சாதனை நாள்!

 

கி.வீரமணி
தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை 
22.4.2025 

குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர், முதலமைச்சர் அவர்களைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, முதலமைச்சரின் இன்றைய அரிய அறிவிப்புக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *