வரதட்சணை கேட்டு பெண் கொடுமை கணவர் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

1 Min Read

சென்னை, ஏப். 21- அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் கணவா் உள்பட நான்கு பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிர் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், பழஞ்சநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் வெற்றிச்செல்வன் (26 ). கடந்த 2022-ஆம் ஆண்டு இவா், ஆண்டிமடம் அருகேயுள்ள ராங்கியம் கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவி பிருந்தா என்பவரை காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுத்துள்ளார். பின்னா் பிருந்தா 7 மாத கா்ப்பிணியான பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

திருமணமான பிறகு சென்னை சென்ற வெற்றிச்செல்வன், பிருந்தாவுடன் பேச மறுத்து, குழந்தை பிறந்தும் கூட பார்க்க வரவில்லை. இதுகுறித்து பிருந்தா கேட்டதற்கு, வெற்றிச்செல்வனும், அவரது குடும்பத்தாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், வெற்றிச் செல்வனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கவுள்ள தாகவும் கூறியுள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினா் வழக்குப் பதிந்து வெற்றிச்செல்வனை கைது செய்து, அரியலூா் மகளிர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

வழக்கை விசாரித்து வந்த நீதிபதி டி.செல்வம், வரதட்சணை கேட்டு பிருந்தாவை கொடுமைப்படுத்திய கணவா் வெற்றிச்செல்வன், மாமனார் காமராஜ் (63), மாமியார் வள்ளி(52), நாத்தனார் ஜெனி (26) ஆகிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து 18.4.2025 அன்று தீா்ப்பளித்தார்.

இதையடுத்து, குற்றவாளிகள் 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். வழக்கில் அரசு தரப்பில் ராஜா ஆஜரானார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *