நாகை, ஏப். 21– நாகை மாவட்டம், நாகை ஒன்றிய கழகம் சார்பில் சிக்கல் கடைவீதியில் “அன்றும்.. இன்றும்.. என்றும். தேவை பெரியார் மற்றும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள் கைக்கு எதிரான பரப்புரை கூட்டம் 20.4.2025 அன்று மாலை 6.00 மணிக்கு எழுச்சியோடு நடைபெற்றது.
நாகை ஒன்றிய கழகத் தலைவர் சோ.மா.வீரமணி தலைமையிலும் கழக நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.எ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பு.அலமேலு, நாகை நகர தலைவர் தெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது.
திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர் மு.குட்டிமணி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
மாநில சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப் பாளர் மு.இளமாறன் தொடக்க உரையாற்றினார். கழக பேச்சாளர் தேவ.நர்மதா சிறப்புரையாற்றினார்.
இறுதியில் நாகை ஒன்றிய செயலாளர் எம்.கே.சின்னதுரை நன்றி உரையாற்றினார். கூட்டத் தில் கீழையூர் ஒன்றிய தலைவர் ரெ.ரெங்கநாதன், கீழையூர் ஒன்றிய செயலாளர் கோலிளி செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.கவிதா, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.ஜெயபிரியா, நாகை நகர அமைப்பாளர் சண்.ரவி, நாகை நகர மாணவர் கழக செ.அறிவுசெல்வன் உள்ளிட்ட கழக மற்றும் ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சி பொறுப்பாளர்களும், தோழர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்றனர்.