சென்னை பொது மருத்துவமனையில் 429 கண்காணிப்பு கேமராக்கள்!

viduthalai
1 Min Read

சென்னை, ஏப். 21-  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப் பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப் பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது.

புற நோயாளிகள்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நாள்தோறும் 12 ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனா்.

மேலும், சுமார் 500 போ் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனா். மருத்துவமனையில் மருத்து வா்கள், செவிலியா்கள், டெக்னீசியன்கள், தூய்மை மற்றும் பாதுகாப்புப் பணியாளா்கள் என ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பணியாற்றி வருகின்றனா்.

கண்காணிப்பு கேமராக்கள்

மருத்துவா்கள் மீது தாக்குதல், நோயாளிக ளிடம் திருட்டு போன்ற சம்பவங்களைத் தடுக்க மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழ்நாடு அரசு உத்தரவின்படி மருத்து வா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக அடுக்கு மாடி-1, அடுக்குமாடி-2, அடுக்குமாடி-3 மற்றும் சிறப்புப் பகுதி தளங்கள், இதயப் பிரிவு தளம், சிறுநீரகப் பிரிவு தளம், முடக்குவாதப் பிரிவு தளம் ஆகிய இடங்களில் 429 கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப் பட்டுள்ளன.

இவை அனைத்தும் 12 கண்காணிப்பு அறைகள் மூலம் பிரத்யேகமாக 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

காவல் துறையும், மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து ஆய்வு செய்து கண் காணிப்புக் கேமராக்கள் நிறுவப்பட வேண்டிய இடத்தை தோ்வு செய்து கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன என்று மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் தெரிவித்தார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *