கன்னியாகுமரி, ஏப். 20- கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்கு இந்தியாவிலேயே முதல்முறையாக கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு கடந்தாண்டு இறுதியில் திறக்கப்பட்டது.
பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த சில நாள்களாக மூடப்பட்ட கண்ணாடிப் பாலம் நேற்று (19.4.2025) மீண்டும் திறக்கப்பட்டது.
ஆய்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் கண்ணாடி கூண்டு பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.