நாகர்கோவில் பகுதியில் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை

1 Min Read

கன்னியாகுமரி, ஏப். 20- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன் பரப்புரையைத் தொடங்கிவைத்தார். பொதுமக்களுக்கு தந்தை பெரியாருடைய கருத்துகள் அடங்கிய நூல்கள், துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. பொதுக்குழு உறுப் பினர் மு.இராசசேகர், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், காப்பாளர் ம.தயாளன்,பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநகர தலைவர் ச.ச.கருணாநிதி,தோவாளை ஒன்றிய தலைவர் மா. ஆறுமுகம், இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ்,கழகத் தோழர்கள் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, மு.குமரிச் செல்வன், பா.சு.முத்துவைரவன், ஆன்டர்சன் மற்றும் பெரியார் பற்றா ளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *