“அன்றும் இன்றும் என்றும் தேவை தந்தை பெரியார்” நாகையில் பரப்புரைக் கூட்டம்

1 Min Read

நாகை, ஏப். 20- நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் திருப்பூண்டி கடைவீதியில் “அன்றும்.. இன்றும்.. என்றும். தேவை பெரியார் மற்றும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை கூட்டம் 18.4.2025 அன்று மாலை 6.00 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது.

கீழையூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலை வர் ரெ.ரெங்கநாதன் தலை மையிலும் திராவிடர் கழக நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.எ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ. புபேஸ்குப்தா ஆகியோர் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது.
மாநில சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் மு. இளமாறன் தொடக்க உரையாற்றினார். திரா விடர் கழக தலைமைக் கழக பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரை யாற்றினார்.

இறுதியில் கீழையூர் ஒன்றிய செயலாளர் செல்வன் நன்றி உரையாற் றினார். இதில் கவியரசன், தங்க . கிருஷ்ணா, சண்.ரவிக்குமார் உள்ளிட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்களும், பொதுமக்களும் பங் கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *