மயிலாடுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பாக 1-7-2023 அன்று மாலை ஆறு மணியளவில் செம்பனார்கோயில் மேலமுக்கூட்டு அண்ணாசிலை அருகில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா நடைபெற்றது. வைத்தீசுவரன்கோயில் நகர கழக தலைவர் வி.ஆர்.முத்தையன் தொடக்க உரையாற்ற, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.சாமிதுரை, மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், திமுக மாவட்ட பிரதிநிதி கே.எஸ்.எஸ். கருணா ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து இறுதியாக கழக பேச்சாளர் இரா. பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கி. தளபதிராஜ் அறிமுக உரையாற்றி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
அண்ணாசிலை அருகில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books