சிந்துவெளி – தமிழர் நாகரிக ஒப்புமை நிரூபணம் அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

1 Min Read

சென்னை, ஏப்.19- சிந்து வெளி நாகரிகத்துக்கும், தமிழா் நாகரிகத்துக்கும் இடையேயான ஒப்புமை நிரூபணமாகி உள்ளதாக நிதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் தொல்லியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு அவா் அளித்த பதிலுரை மற்றும் அறிவிப்புகள்:

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் தொல்லியல் துறை சார்ந்த பணிகள் தீவிர மாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அகழாய்வுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய அளவில் தமிழ்நாட்டில்தான் அதிக கல்வெட்டுகள் உள்ளன. அதுவும் தமிழில் அதிக கல் வெட்டுகள் இருக்கின்றன. பொருநை அருங்காட்சியகம் விரைவில் தொடங்கப்படும்.

தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கப் பெற்ற முத்திரைகள், பானைகளை ஆய்வு செய்தபோது சிந்து சமவெளி நாகரிகத்துக்கும், தமிழா் நாகரிகத்துக்கும் ஒப்புமை உள்ளது தெரியவந்துள்ளது.

அறிவிப்புகள்: தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் மன்னார் கோயில் ஊரிலுள்ள தமிழிக் கல்வெட்டு உள்ளிட்ட 12 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்படும்.

தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருட்காட்சியகவியல் நிறுவனத்தில் பயிலும் மாணவா் களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை ரூ. 8 ஆயிரமாக உயா்த்தப்படும். மேலும், அங்கு புதிதாக சுவடியியல் எனும் ஓராண்டு பட்டயப் படிப்பு அறி முகம் செய்யப்படும்.

இதுதவிர தமிழ்நாட்டின் ஒவ் வொரு பண்பாட்டு மண்டலத்தின் தனித்தன்மைகளை எடுத்துக் கூறும் வகையில் தமிழ்நாட்டின் பண்பாட்டு வரலாறு எனும் ஒரு தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ் மொழியின் தன்மை மற்றும் பண்டையகால வரலாற்றை பறைசாற்றும் கல் வெட்டுகளை கால வாரியாக தொகுத்து கல்வெட்டு அருட் காட்சியகம் மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் அமைக்கப்படும் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *