சென்னை, ஏப்.18- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட் டணி ஏற்பட்டுள்ள நிலையில், கட்சித் தலைமையின் அனுமதி இன்றி கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. திடீர் கட்டுப் பாடு விடுத்துள்ளது.
அ.தி.மு.க. – -பா.ஜ.க. கூட்டணி
தமிழ்நாட்டில் வருகிற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்துள்ளன. இதனை சென்னை வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தெரிவித்தார். அப்போது அமித்ஷா, தேர்தலுக்குப் பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றார். இது மிகப்பெரிய விவாதப்பொருளாகியது
இது குறித்து விளக்கம் அளித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி அரசு என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறவில்லை. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி, தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்று தான் சொன்னார். வரும் சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி ஜெயித்தாலும், ஆட்சியில் பங்கு இல்லை என்பதை திட்டவட்ட மாகத் தெரிவித்தார். இருப்பினும் இது பற்றி பல்வேறு கருத்துகள் ஊடகங்களில் வந்துகொண்டு இருக்கின்றன.
கட்டுக்கோப்பான இயக்கம்
இந்தநிலையில், அ.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் காலந்தொட்டும், இருபெரும் தலைவர்களின் வாழ்த்துகளோடு அ.தி.மு.க. ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை கட்சித் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும்.
கருத்து தெரிவிக்க வேண்டாம்
ஆகவே, அ.தி.மு.க. தலைமை அலுவலக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சி நிர்வாகிகளும், கட்சியின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கட்சியின் தலை மையின் அனுமதிபெறாமல், தொலைக் காட்சிகள், சமூக ஊட கங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்ன பிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.