‘திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழுக்கு முதலிடம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணியிடங்களில் 20 விழுக்காடு முன்னுரிமை தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு

viduthalai
1 Min Read

சென்னை, ஏப்.18- தமிழ்நாடு அரசு பணி நியமனங்களில் நேரடி நியமனத்துக்கான காலிப் பணியிடங்களில் 20 சதவீதம் பணியிடங்களை தமிழ் வழிக் கல்வி பாடத் திட்டத்தில் படித்தவர் களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது குறித்து வெளி யிடப்பட்ட அரசாணை எண்.82, பத்தி 4-இல் குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பதிலாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாற்றி அமைத்து அரசு ஆணையிட்டு உள்ளது. அதில் குறிப்பிட்ட சில வழிகாட்டு நெறிமுறைகள் விவரம் வருமாறு:-

இதர மொழிகளை பயிற்று மொழியாக படித்து, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் இந்த முன்னுரிமை ஒதுக் கீட்டுக்கு தகுதியுடை யவர்கள் இல்லை. பள்ளிக்கு செல்லாமல், நேரடியாக தனித் தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் முன் னுரிமை வழங்கப்பட தகுதி யுடையவர்கள் அல்லர்.

கல்வித் தகுதி சான் றிதழ், மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் மூலம் தமிழ் வழியில் படித்தவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட பணியாளர் தேர்வு முகமைகள், பணி நியமன அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதி பெற்றவர் களை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் பாடத்துக்கான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். தமிழ் பாடத் திலும் மாறுபட்ட வேறு ஒரு பாடத்திலும் பட்டம் பெற்றவர்களை தமிழ் ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யக் கூடாது என்பதற்கான திருத்தங்களை மேற்கொள் வது தொடர்பாக பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறைகள் நட வடிக்கை மேற்கொள்ளும்.

இந்த 20 சதவீத முன் னுரிமை ஒதுக்கீடா னது நேரடி பணி நியமனத் துக்கான ஒவ்வொரு தேர்வு நிலையிலும் (முதல்நிலை, முதன்மை, நேர்முகத்தேர்வு) பதவி வாரியாக பின்பற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 வகையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *