அண்ணல் அம்பேத்கர்- புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டம்

Viduthalai
1 Min Read

கன்னியாகுமரி, ஏப். 18- கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர்கழகம் சார்பாக அண்ணல் அம் பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்  பிறந்த நாள் விழா சிறப்புக்கூட்டம் கருத்தரங்கம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் வைத்து நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு பகுத்தறி வாளர் கழக கழக மாவட்டத் தலைவர்
உ. சிவதாணு  தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்ட திராவிடர்கழக செயலாளர்  கோ.வெற்றி வேந்தன்  அண்ணல்  அம்பேத்கரின் தூய தொண்டுகள், புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் புரட்சிகரமான கவி தைகள் குறித்து தொடக் கவுரையாற்றினார்.

பெரியார் பெருந் தொண்டர் ஞா.பிரான்சிஸ், கோட்டாறு பகுதி தலைவர்  ச.ச.மணிமேகலை ஆகி யோர் முன்னிலை வகித் தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மேனாள் செயலாளர் இசக்கி முத்து, திராவிட நட்புக்கழக  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.விஷ்ணு ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோவாளை ஒன்றிய கழக செயலாளர் ந.தமிழ் அரசன், கழகத் தோழர்கள் எ.ச. காந்தி, கு. சந்திரன் மு.குமரிச் செல்வன்,  பா.சு.முத்துவைரவன், மு.பால்மணி, ஆன் டர்சன்  பெரியார் பற்றாளர்கள் பலரும்  கலந்துகொண்டனர். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் எம்.பெரியார் தாஸ் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *