தமிழ்ப் புத்தாண்டாம். ஆண்டு என்றுகூட சொல்லக் கூடாது!
ஆமாம்; வருஷம் என்றுதான் சொல்லவேண்டும் – அப்படித்தானே!
விசுவாவசு என்றால் யார்?
கந்தர்வன்!
ஓ, பார்ப்பனர்கள் கல்யாண வீட்டில் ஒரு மந்திரம் சொல்லுவார்களே!
மணமகளைப் பார்த்து சோமன் என்பவன் இந்தப் பெண்ணுக்குக் கணவனாக இருந்தான் – பிறகு கந்தர்வன் இந்தப் பெண்ணின் புருஷன்; பெண்ணின் மூன்றாவது கணவன் அக்னி; நான்காவது கணவன் மனித ஜாதியில் பிறந்தவன் என்பதுதான்.
கல்யாணத்தில் பார்ப்பனர்கள் சொல்லும் அந்த சுலோகம் இதுதான்.
“ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ரூதீயோ அக்நிஷ்டேபதி:
துரீயஸ்தே மநுஷ்யஜா:’’
கந்தர்வன் என்பவன் தேவர்களுக்கு சோமரசம் எனும் மதுபானம் தயாரித்துக் கொடுப்பவன்.
எப்படியாப்பட்ட பெயர் தமிழ் வருஷத்துக்குக் கிடைத்துள்ளது பார்த்தீர்களா?