மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை ரூ. 5 ஆயிரமாக உயர்வு-அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

Viduthalai
1 Min Read

சென்னை, ஏப். 18– மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி சட்டமன் றத்தில் அமைச்சர் கீதாஜீவன் அறிவித்தார்.

திருமண உதவித்தொகை உயர்வு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு பதிலாக அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது அவர், மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினர்கள் மகள், மகன் திருமணத்துக்கான உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், இறுதி நிகழ்விற்காக மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.17 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும், மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களை பெறும் வகையில் ரூ.131.25 கோடியில் தன்னிறைவு அடையும் திட்டம் செயல்படுத்தப்படும்.

பேட்டரியால் இயங்கும் உபகரணம்

தசைச்சிதைவு மற்றும் முதுகுதண்டுவட பாதிப்பால் கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியாகவும், 3 சக்கர வாகனமாகவும் பயன் படுத்தக்கூடிய இணைக்கும் வசதி கொண்ட மின்கலனால்(பேட்டரி) இயங்கும் உபகரணம் வழங்கப் பட்டு வரும் நிலையில் மூளை முடக்குவாதம் உள்ளிட்ட இதர குறைபாட்டினால் 2 கால்களும் பாதிக்கப்பட்ட நடக்க இயலாத 18 வயதுக்கு மேற்பட்ட 600 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.30 கோடி மதிப்பில் இந்த உபகரணம் வழங்கப்படும்.

தசைச்சிதைவு நோய், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பல்வகை குறைபாடுடைய மாற்றுத்திற னாளிகள் இயற்கை உபாதைகளுக்கு பயன்படுத்தும் வகையிலான சக்கர நாற்காலி வழங்கும் திட்டம் 1,000 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *