நெக்ஸ்ட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்

2 Min Read

« மருத்துவ ஆய்வக நுட்புநர் நிலை  காலிப் பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர் வாணையம் (MRB) மூலம் எழுத்துத் தேர்வு வைத்து , இட ஒதுக்கீடையும் நடைமுறைப்படுத்தி, காலமுறை ஊதியத்தில் விரைந்து நிரப்பிட வேண்டும். 

« கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பணியிடங்களை நியமிக்கும் அரசாணை எண்: 401 அய் ரத்து செய்திட வேண்டும். 

« பணி நியமனத்தின் போது சீனியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கருணை அடிப் படையில், அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிட வேண்டும். 

« தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வக நுட்புநர் நிலை-2 காலிப் பணியிடங்களை MRB மூலம் எழுத்து தேர்வு வைத்து, இட ஒதுக் கீட்டையும் பின்பற்றி நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும். 

« மருத்துவ ஆய்வக நுட்புநர்  காலிப் பணியிடங்களை நிரப்புவதில் ஒப்பந்தம்,தற்காலிகம், அவுட்சோர்சிங் போன்ற பணிநியமன முறை களை கைவிட வேண்டும். நிரந்தர அடிப் படையில் மட்டுமே நியமனங்களை செய்திட வேண்டும். 

« மருத்துவ ஆய்வக நுட்புநர்களின் நலன் காத்திட ,2014 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணை எண்:417-இன்படி, தனி கவுன்சில் அமைத்திட வேண்டும். 

« தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) வழி காட் டுதல்படி, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப,  மருத்துவ ஆய்வக நுட்புநர் நிலை  இரண் டிற்கான (Grade -2), புதிய பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். 

« அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் இரண் டாம் நிலை (நிலை-2), மருத்துவ ஆய்வக நுட்புநர் களின்  பணியிடங்களை கண்டறிந்து, அவற்றை காலிப் பணியிடங்களாக அறிவித்திட வேண்டும். 

« தமிழ்நாடு முழுவதும், வட்டார அளவில் ஒருங்கிணைந்த , சிறந்த மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களை உருவாக்கி,அதில் மருத்துவ ஆய்வக இரண்டாம் நிலை நுட்புநர்களை (நுட்புநர்-2)  நிரத்தர அடிப்படையில்,காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். 

« அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரண் டாண்டு , மருத்துவ ஆய்வக நுட்புநர் பட்டயப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வெள்ளை அங்கியும், Internship காலத்தில் கருணை அடிப்படையில் ,பயிற்சிக் கால உதவி ஊக்கத் தொகையும் வழங்கிட வேண்டும். 

« ஒன்றிய அரசு, மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை பறிப்பதை கைவிட வேண்டும். 

“நெக்‌ஸ்ட்”  தேர்வை கைவிட வேண்டும். 

நவீன அறிவியல் மருத்துவத்தை சீர்குலைப் பதை கைவிட வேண்டும். 

மருத்துவ மாணவர் விரோதப் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். 

– டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *