சென்னை, ஏப்.17- அரசாணைகள், சுற்றறிக் கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தர விட்டு உள்ளது.
அரசாணை
இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சி துறை அரசு செயலாளர் ராஜா ராமன், அனைத்து அரசு துறை செயலாளர்க ளுக் கும், மாவட்ட ஆட்சி யர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:-
தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழு மையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கை களிலும் தமிழ் மொழியை பயன்படுத்தவும் பின்வரும் அறிவுறுத்தல்களை தவ றாமல் பின்பற்ற வேண்டும்.
அந்த வகையில், அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண் டும். சுற்றறிக்கை குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும். துணை, தலைமை அலு வலகங்களில் இருந்து அரசு மற்றும் பிற அலு வலகங்களுக்கு அனுப்பப் படும் கருத்துரைகள், தமிழிலேயே இருக்க வேண்டும்.
தமிழில் கையெழுத்து
வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடிதபோக் குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப் பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும், தமிழில்தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களிடம் இருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் எழுதுவதுமில்லாது அது குறித்த குறிப் புகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.
அரசு பணியாளர்கள் அனைத்து ஆவணங்களி லும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண் டும். ஆங்கிலத்தில் வெளி யிடப்படும் அரசா ணைகளை, தமிழில் வெளியிடுவதற்கு ஏதுவாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறையின் மொழி பெயர்ப்பு பிரிவு மூலம் தமிழாக்கம் செய்வதற்கு அனுப்பி வைக்கவும் அல்லது அந்தந்ததுறைகளா லேயே தமிழில் மொழி பெயர்க்கப்படும் அரசா ணைகளை தேவை இருப்பின் கூர்ந்தாய்வு செய்யும் பொருட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் மொழி பெயர்ப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.