தொடக்கமே சுருதி பேதத்தில்தானா?

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும். – அமித்ஷா
‘‘தமிழ்நாட்டில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி மட்டுமே! கூட்டணி ஆட்சி கிடையாது. (2026 தேர்தலில் அ.தி.மு.க. வென்றால்)’’
– எடப்பாடி பழனிசாமி
கூட்டணிபற்றிப் பேசியது அமித்ஷாதான். எனவே, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா என்பது குறித்து அந்த நேரத்தில் அமித்ஷா முடிவெடுப்பார்.
– தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைவர், நயினார் நாகேந்திரன்
தொடக்கத்திலேயே இந்த கோஷ்டி கானத்தில் ‘‘சுருதி பேதம்’’ – இனியும் எத்தனை எத்தனையோ?
இந்த ஓநாய் – ஆட்டுக்குட்டி கூட்டின் வினையும், விளைவுகளும் போகப் போக மக்களுக்குப் புரியும்!
‘எந்தக் காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இனி இல்லை’ என்று முன்பு எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியதுபோல்தான் அவரது அறிவிப்பும் காற்றில் பறக்கப் போகும் ஒன்றா?
கூட்டணி சேரும் முன்னரே முடிவு செய்யவேண்டாமா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *