புதுச்சேரி, ஜூலை 4- புதுச்சேரி பகுத் தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 25.6.2023 அன்று மாலை 6:00 மணியளவில் புதுச்சேரி இராசா நகர் பெரியார் படிப் பகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன் தலைமை தாங் கினார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணை பொதுச் செயலாளர் இளவரசி சங்கர், புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் வே.அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் இரா.சத்தியராஜ் வரவேற் புரையாற்றினார்.
வைக்கம் நூற்றாண்டு விழா, பெரியார் 1000 வினா-விடைப் போட்டி, கிராமபுறத்தில் பகுத்த றிவு பிரச்சாரம் செய்வது. புதிய உறுப்பினர் சேர்க்கை, 23.7.2023 அன்று ஒரு நாள் பெரியாரியல் பயிற்சி முகாம் நடத்துவது குறித்து நடை பெற்ற கலந்துரையாடல் கூட்டத் தில் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித் குமார், விடுதலை வாசகர் வட்டத்தின் புதுச்சேரி தலைவர் கோமு.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கருத் துரைக்கு பின் மாநில பகுத்தறிவா ளர் கழக தலைவர் இரா.தமிழ் செல்வன் அவர்கள் பகுத்தறிவாளர் கழக செயல்பாடுகள், அமைப்பு பணிகள், தீவிர உறுப்பினர் சேர்க்கை அரசு பணியாளர்கள், கல்லூரி மாணவர்களை ஈர்ப்பது குறித்து விரிவான உரையாற்றினார்.
இறுதியாக கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் புதுச்சேரியில் பகுத்தறி வாளர் கழகம் விரைவாக பிரச்சார பணிகளை செய்ய வேண்டும் எனவும், பகுத்தறிவாளர் கழகத்தில் நிறைய பேச்சாளர்கள் உள்ளனர். அவர்களை பயன்படுத்தி பிரச் சாரம் செய்வது, உறுப்பினர் சேர்க்கை அதிக அளவில் செய்ய வேண்டியும், புதுச்சேரி பகுத்தறி வாளர் கழக செயல்பாடுகள் முன் எப்போதும் இல்லாத அளவில் சிறப்பாக அமைய வேண்டும் எனவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அதை எதிர்பார்க்கிறார் எனவும் பல்வேறு செய்திகளை மேற்கோள் காட்டி சிறப்புரையாற் றினார். இறுதியாக பகுத்தறிவாளர் கழக செயலாளர் பா.குமரன் நன்றி நவின்றார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சி முகாம் சிறப்பாக நடத்துவது, வைக்கம் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தை பகுத்தறிவா ளர் கழகத்தின் சார்பில் சிறப்பாக நடத்துவது, பெரியார் 1000 தேர்வை புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 5,000 பேர் கலந்து கொள்ளும் வகையில் நடத்துவது, புதுச்சேரியில் மாநில அளவில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில், பகுத்தறிவாளர் கழக மாநாடு நடத்துவது எனவும், புதுச்சேரியில் பகுத்தறிவாளர் கழக கிளைகளை கொம்யூன் அளவிலும், பல்வேறு பகுதிகளில் அமைப்பது எனவும், உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவாக முடித்து தலைமைக்கு ஒப்படைப் பது எனவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கலந்துரையாடல் கூட்டத் தில் கலந்து கொண்டவர்கள்: புதுச்சேரி கழக காப்பாளர் இரா.சடகோபன், புதுச்சேரி கழக தொழிலாளர் கழக தலைவர் வீர.இளங்கோவன், புதுச்சேரி மாவட்ட கழக செயலாளர் கி.அறி வழகன், புதுச்சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் துரை.திருநாவுக்கரசு, செஞ்சி தா.நந்தகுமார், பொதுக் குழு உறுப்பினர் லோ.பழனி, பெரியார் பெருந்தொண்டர் செ. இளங்கோவன், வில்லியனூர் நகர கழக தலைவர் கு.உலகநாதன், அரியாங்குப்பம் கொம்யூன் கழக தலைவர் இரா.ஆதிநாராயணன், அனிதா பாலகிருஷ்ணன், வாசுகி பாலமுருகன், வாணரப்பேட்டை பெ.ஆதிநாராயணன், ஆ.சிவரா சன் மற்றும் பலர் கலந்து கொண் டனர். புதிய பொறுப்பாளராக பகுத்தறிவாளர் கழக அமைப்பா ளராக மு.ந.ந.நல்லய்யன் தெரிவு செய்யப்பட்டார்.