ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக இருந்தேன்; பாஜக உடன் கூட்டணி வைத்ததால் தோற்றேன் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியிருந்தார். ஆனால், அவர் பேசிய அடுத்த வாரமே அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. கூட்டணி அறிவிப்புக்கு பின் மவுனமாக இருந்த ஜெயகுமார் வெளியிட்ட தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இபிஎஸ் ஒளிப்படத்தை தவிர்த்துள்ளார். இது புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.