மறைவு

viduthalai
1 Min Read

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர், மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலவாக்கம் க.சோமுவின் மனைவியும், சென்னை பெருநகர மாநகராட்சி தி.மு.க. 183ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.தமிழரசி சோமுவின் தாயாருமான எஸ்.வசந்தி (வயது 60) நேற்று (15.4.2025) மாலை 4.00 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

இன்று (16.4.2025) காலை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாலவாக்கம் சோமுவின் இல்லத்திற்கு நேரில் சென்று மறைவுற்ற அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மாவட்ட கழக காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன் மற்றும் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

அம்மையாரின் இறுதி ஊர்வலம் இன்று (16.04.2025) மாலை 5.00 மணியளவில் எண்.3/286, பச்சையப்பர் தெரு, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை-41 – அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு பாலவாக்கம் இடுகாட்டில் இறுதி நிகழ்வு நடைபெறுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *