மறைவு

1 Min Read

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர், மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலவாக்கம் க.சோமுவின் மனைவியும், சென்னை பெருநகர மாநகராட்சி தி.மு.க. 183ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.தமிழரசி சோமுவின் தாயாருமான எஸ்.வசந்தி (வயது 60) நேற்று (15.4.2025) மாலை 4.00 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

இன்று (16.4.2025) காலை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாலவாக்கம் சோமுவின் இல்லத்திற்கு நேரில் சென்று மறைவுற்ற அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மாவட்ட கழக காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன் மற்றும் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

அம்மையாரின் இறுதி ஊர்வலம் இன்று (16.04.2025) மாலை 5.00 மணியளவில் எண்.3/286, பச்சையப்பர் தெரு, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை-41 – அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு பாலவாக்கம் இடுகாட்டில் இறுதி நிகழ்வு நடைபெறுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *