கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லம் சிறந்த என்.ஜி.ஓ.வாக தேர்வு செய்யப்பட்டு சமூக நலத்துறையின் சார்பில் சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது. இந்நிலையில் (11.04.2025) திருச்சி வருகை தந்த திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் தமிழ்நாடு அரசின் சார்பில் விருது பெற்றமைக்காக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.