ஆளுநர் ரவி இனியும் பதவியில் தொடரக்கூடாது பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தல்

viduthalai
1 Min Read

சென்னை, ஏப்.15- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில், ஒரு குறிப்பிட்ட மதக் கடவுளின் பெயரை உச்சரித்ததோடு, அதனை மாணவர்களையும் சொல்லவைத்த விவகாரத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வகுப்பறை நடவடிக்கைகள் மற்றும் அதிகாரப்பூர்வ செயல்பாடு களில் மாணவர்களுக்கு எந்த மத அறிவுறுத்தல்களும் வழங்கப்படக் கூடாது. மேலும் குறிப்பிட்ட மதத்தின் கடவுளின் பெயரை உச்சரிக்க யாரும் மாணவர்களுக்கு அறிவுறுத்தவும் கூடாது. இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி ஆர்.என்.ரவி ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளின் பெயரை உச்சரித்து, மாணவர்களை அதையே மூன்று முறை சொல்லச் சொல்லி இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க தவறிவிட்டார்.

ஆர்.என்.ரவி தனது பதவிப் பிரமாணத்தை மீறினார். அவர் அரசமைப்பைக் கடைப்பிடிக்கவும், அதன் லட்சியங்கள் மற்றும் நிறுவனங்களை மதிக்கவும் தவறி இருக்கிறார். இந்திய அரசமைப்பின் 159ஆவது பிரிவை வேண்டுமென்றே மீறியதற்காக, ஆர்.என்.ரவியை தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *