பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 16ஆம் தேதி நடக்கிறது

Viduthalai
2 Min Read

சென்னை, ஏப். 14- தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களின் துணைவேந்தா்கள், பதிவாளா் களுடனான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை (ஏப்.16) நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உள்ளது என்ற மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டம் அரசிதழில் சனிக்கிழமை (ஏப்.12) வெளியான நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்

பல்கலைக்கழக வேந்தா் என்ற முறையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன அதிகார மசோதா, வேந்தா் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கக் கோரும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநா் ஆா்.என்.ரவி காலதாமதம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அதற்கு எதிராகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலவரம்பை நிர்ணயம் செய்யக்கோரியும் தமிழ்நாடு அரசு கடந்த 2023-இல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது.

அந்த வழக்கை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆா்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமா்வு கடந்த சில மாதங்களாக விசாரித்து வந்தது. தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன், முகுல் ரோத்தகி, ராகேஷ் துவிவேதி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா். ஆளுநா் தரப்பில் ஒன்றிய அரசின் தலைமை சட்ட ஆலோசகா் ஆா்.வெங்கடரமணி மற்றும் சொலிசிட்டா் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் வாதிட்டனா். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு கடந்த ஏப்.8-இல் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக் களையும் நிறுத்தி வைத்து பின்னா் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் செயல் சட்டத்து எதிரானது என்று தீா்ப்பளிக்கப்பட்டது. அவ்வாறு மசோதாக்களை தாமதப் படுத்த ஆளுநருக்கு தனி அதிகாரம் ஏதுமில்லை என்றும் தெளிவு படுத்தப்பட்டது.

அதேபோல மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநா் முடிவெடுக்க வேண்டும் என்றும் கால வரையறையை உச்சநீதிமன்றம் நிர்ணயித்தது. இதன் மூலம் ஆளுநா் ஆா்.என்.ரவியால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக உச்சநீதி மன்றம் தீா்ப்பில் குறிப்பிட்டது.

தொடா்ச்சியாக அந்த 10 மசோ தாக்களும் சட்டமாவதாக 12.4.2025 அன்று அரசிதழில் அறிவிப்பு வெளியானது. வருங்காலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சர் வசமாகியுள்ளதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

16ஆம் தேதி நடக்கிறது

இந்த சூழலில் தமிழ்நாடு அரசு சார்பில் 13.4.2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வரும் புதன்கிழமை (16.4.2025) மாலையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் தமிழ்நாட்டின் உயா்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மற்றும் பதிவாளா்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களில் ஆளுநா் ஆா்.என்.ரவி வசமிருந்த அதிகாரங்கள், உச்சநீதிமன்றத் தீா்ப்புக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்றடைந்த நிலையில், நடைபெறும் முதல் கூட்டம் இதுவென்பதால் பல்கலைக்கழக அளவில் மட்டுமல்லாது மாநில அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

நிர்வாகம் மற்றும் அதிகார ரீதியாகவும் ஏற்படுத்தப்பட வேண் டிய சீரமைப்புகள், மாற்றங்கள் குறித்து சில முக்கிய அறிவிப்புகள் அக் கூட்டத்தில் வெளியாகலாம் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *