திராவிட இயக்க எழுத்தாளர் விஜயபாஸ்கர் மறைவிற்கு இரங்கல்

1 Min Read

திராவிட இயக்க இளம் எழுத்தாளர், சமூகநீதி தொடர்பான கட்டுரைகளை ஆய்வு பூர்வமாக ‘முரசொலி’யில் தொடர்ந்து எழுதிவந்த தோழர் சு.விஜயபாஸ்கர் (40) நேற்று (12.4.2025) சென்னையில் விபத்தில் காலமானார் என்ற செய்தி அறிந்து பெரிதும் அதிர்ச்சியுற்றோம். ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட கொள்கையாளர்; சிங்கப்பூரிலும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தில் துடிப்புடன் செயல்பட்டவர். EWS – உயர் ஜாதியினருக்கான பொருளாதார இடஒதுக்கீடு குறித்த அவரது தொகுப்பு நூல் மிக முக்கியமானதாகும்.

இளம் வயதில் இத்தகையோரை இழப்பது திராவிடர் இயக்கத்திற்கும், சமூகநீதி உணர்வாளர்களுக்கும் பெரும் இழப்பாகும்.
அவரது குடும்பத்தினர் அனைவரும் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என இயக்கம் சார்ந்தோராவர்.
அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஏற்கவியலாத இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

13.4.2025 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *