அம்பேத்கர் பிறந்தநாளை வெற்றி விழாவாக நடத்த வேண்டும்

Viduthalai
1 Min Read

வி.சி.க. நிர்வாகிகளுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்

சென்னை, ஏப். 13- அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை தேர்தல் வெற்றி விழா வாக நடத்த வேண்டும் என விசிக நிர்வாகிகளுக்கு அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் முகநூல் நேரலையில் பேசியிருப்பதாவது:
ஏப். 14ஆம் தேதி சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை சமத் துவ நாளாக கொண்டாடி வரு கிறோம். அந்த வகையில அவரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, சமத்துவ நாள் உறுதி மொழியேற்க வேண்டும்.

சமத்துவ நாள்
இந்த நிகழ்ச்சியையே தேர்தல் வெற்றி விழா பேரணியாக, சமத்துவ நாள் அணிவகுப்பாக நடத்த வேண்டும். இது தொடர்பாக முறையாக காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக் கும் வகையில் மேலிடப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள், பெண்களை அதிக அளவில் பங்கேற்க செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏப்.14ஆம் தேதி பெங்களூருவில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் நானும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இருக்கிறேன். கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் நடைபெறும் சமத்துவ வார நிகழ்ச்சியில் தலைமை நிலையச் செயலாளர் இளஞ்சேகுவாரா பங்கேற்கிறார்.
ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா பகுதிகளிலும் விசிக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *