கோவை, ஏப்.13- நெருக்கடி கொடுத்து கூட்டணி அமைத்துள்ளனர். பா.ஜனதாவின் கட்டுப்பாட்டுக்குள் அ.தி.மு.க. சென்றுவிட்டது என்று திருமா வளவன் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி
அ.தி.மு.க.-பா.ஜனதா கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு பின்னர், கூட் டணி ஆட்சி அமைப்போம் என அ.தி.மு.க. தலைமை அறிவிக்கவில்லை. அ. தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்து இருக்கிற பா.ஜனதாவே அறிவித்து இருக்கிறது. இதைப் பார்க்கும்போது, அ.தி.மு.க. தலைமையில் கூட் டணியா? இல்லை, பா.ஜனதா தலைமையில் கூட்டனியா? என்பதே சந்தேகமாக இருக்கிறது. அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி என்றால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அறிவித்து இருக்க வேண் டும். ஆனால் பா.ஜனதாதான் அறிவித்தது. கூட்டணி ஆட்சி என அறிவித்து இருப்பதும் பா.ஜனதாதான். அப்படியா னால் அ.தி.மு.க.வின் பங்கு என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
வாய்ப்பு இல்லை
அ.தி.மு.க. தொண்டர்கள் இதை மனப்பூர்வமாக ஏற்க வாய்ப்பு இல்லை என்றுதான் நான் நம்புகிறேன். இந்தக் கூட்டணி ஏற்கெனவே மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி. தி.மு.க. கூட்டணிக்கு எதிராக எந்த தாக்கத்தையும் இது ஏற்படுத்திவிடாது. அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி அமைந்தால் கட்சியில் இருந்து வெளியேறி விடுவோம் என்று மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் சொல்லக்கூடிய அளவுக்கு இருந்தனர். ஆனால் அதை யெல்லாம் மீறி எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுடன் அமர்ந்து கூட்டணி அமைத்துள்ளார். அ.தி.மு.க. மேனாள் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
பா.ஜனதாவின் கட்டுப்பாட்டுக்குள்…
செங்கோட்டையன் போன்றோர் அமித்ஷாவை தனியாக சென்று, சந்தித்து பேசிய சூழ்நிலைகளும் இருந்தது. இவை அனைத்தையும் நாம் ஒப்பிட்டு பார்க்கும்போது, அ.தி.மு.க.வுக்கு ஏதோ ஒரு நெருக்கடியை பா.ஜனதா கொடுத்து இருப்பதை நம்மால் கணிக்க முடியும். அந்த அடிப்படையில் தான் இந்த கூட்டணி உருவாகி இருக்கிறது.
பா.ஜனதா இருக்கிற அணி யில் சிறுபான்மையினர் வாக்களிப்பதற்கு இந்திய அளவில் வாய்ப்பு இல்லை.பா.ஜனதாவோடு அ.தி.மு.க. கூட்டணியில் இணைகிறது என்றால், அந்த அணிக்கு எப்படி சிறுபான்மையினர் வாக்கு போய் சேரும். வக்பு சட்ட திருத்த மசோதாவை, எதிர்த்து மாநிலங்களவையில் அ.தி.மு.க.வினர் வாக்களித்து உள்ளார்கள். ஆனால் திடீ ரென பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறார் கள். இந்த இடைப்பட்ட இரண்டு, மூன்று நாட்களில் என்ன நிகழ்ந்தது என்பது, யாருக்கும் தெரியாது. முழுமையாக அ.தி.மு.க., பா.ஜனதாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்று இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.