ஆண்டு சந்தா

1 Min Read

சோழிங்கநல்லூர் மாவட்ட கழக காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் அவர்கள் தமது 88ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களை சந்தித்து, ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.5000 – ‘உண்மை’ ஆண்டு சந்தா ரூ.900 – பெரியார் பிஞ்சு ஆண்டு சந்தா ரூ.600 ஆகியவற்றை வழங்கி மகிழ்ந்தார். அவருக்கு கழகத் துணைத் தலைவர் பயனாடை அணிவித்து வாழத்து தெரிவித்தார். தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ. நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கே. ராஜேந்திரன் – கழக பொதுக் குழு உறுப்பினர் பி.சி. ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர். (சென்னை பெரியார் திடல் – 12.4.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *