தஞ்சை வல்லத்தில் தமிழர் தலைவருடன் புதுகை எம்.எம். அப்துல்லா எம்.பி. சந்திப்பு

1 Min Read

வல்லத்தில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வளாகத்திற்கு நேற்று (11.04.2025) வருகை தந்த தி.மு.க. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் புதுகை எம்.எம்.அப்துல்லா அவர்களுக்கு பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்தும், மேனாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் எழுதிய “டார்கெட் 3 பில்லியன்” புத்தகத்தைப் (இப் புத்தகத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தைச் சிறப்பித்துப் பல பக்கங்கள் எழுதியுள்ளார்) பரிசாக வழங்கியும் வாழ்த்தினார்.

உடன்: பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெ.ராமச்சந்திரன், இணைத் துணை வேந்தர் ஆர்.மல்லிகா, பதிவாளர் பூ.கு.சிறீவித்யா, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தையும், அதன் பல்வேறு புதுமையான முயற்சிகளையும் பார்த்து, பல ஆண்டுகளுக்கு முன்பு தாம் வந்ததற்கும் தற்போது இருக்கும் மாற்றத்திற்கும் இடையில் பெரிய வளர்ச்சி இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். (வல்லம், தஞ்சை, 11.04.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *