இதுவும் ஒரு தினமலர் செய்திதான்!

1 Min Read

‘திருத்தவே முடியாது!’

‘இப்படிப்பட்டவர்களை அமைச்சராக வைத்திருந்தால், யோகி ஆதித்யநாத்துக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும்…’ என கோபப்படுகின்றனர், உத்தர பிரதேச மாநில பா.ஜ.,வினர்.

இங்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இவரது அமைச்சரவையில் சிறிய கட்சிகளைச் சேர்ந்த சிலருக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

நிஷாத் என்ற கட்சியின் தலைவரான சஞ்சய் நிஷாத் என்பவர், மாநில மீன்வளத் துறை அமைச்சராக உள்ளார். இவரது சமீபத்திய செயல்பாடுகள் தான், பா.ஜ.,வினரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளன. இவர், வாரத்தில் மூன்று நாட்கள், சில மணி நேரங்களுக்கு தன் கட்சி அலுவலகத்தில் தியான நிலையில் அமர்ந்து விடுவார்.

அப்போது, அவரது கட்சி தொண்டர்கள், அவருக்கு ஆரத்தி எடுத்து வழிபடுவதுடன், அவரைப் போற்றி பஜனை பாடல்களையும் பாடுவர்; ஒவ்வொருவராக வந்து ஆசி வாங்குவர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, பெரும் சர்ச்சையாகி விட்டது. ‘பொறுப்பான அமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவர், தன்னைத் தானே கடவுளாக சித்தரிக்கலாமா…’ என, பலரும் விமர்சித்து வருகின்றனர்.

சஞ்சய் நிஷாத்தோ, ‘என்னை வழிபடும்படி யாரையும் நான் கட்டாயப்படுத்துவது இல்லை. என்னை குருவாக நினைப்பவர்கள் வழிபடுகின்றனர். இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை…’ என, சீறுகிறார்.

உ.பி., மக்களோ, ‘ம்கூம்; இவரை திருத்தவே முடியாது…’ என, புலம்புகின்றனர். (5.7.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *