பெரியார் விடுக்கும் வினா! (1616)

1 Min Read

உங்கள் கடவுள் கட்டளையெல்லாம் எல்லா இழிவுகளையும் பொறுத்துக் கொண்டிருந்தால், நீ செத்த பிறகு மேல் உலகத்தில் கடவுள் உன்னுடைய பொறுமைக்காக நல்ல சன்மானம் கொடுப்பார். அடுத்த ஜென்மத்தில் நல்ல பிறவி பெறுவாய். பொறுத்தவர் பூமியாள்வார் என்றுதான் உபதேசிக்கும். இந்த உபதேசத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கேட்டுக் கேட்டு, அதன்படி பொறுமையாய் இருந்து வந்ததின் பலன்தான் இன்றும் இன்னமும் நீங்கள் பொறுமையாகவே இருந்து இழிவடைந்து, கஷ்டப்பட்டுச் சீக்கிரம் செத்து, கடவுளிடம் சன்மானம் பெறவேண்டியவர்களாக இருக்கிறீர்கள். ஆகவே செத்த பிறகு மேல்லோகத்தில் அல்லது அடுத்த ஜென்மத்தில் பயன் பெறலாமென்கிற பித்தலாட்டச் சுயநலச் சூழ்ச்சியான உபதேசத்தை அடியோடு மறந்து, இந்த ஜென்மத்தில் நீங்கள் சாவதற்கு முன் உங்கள் இழிவுக்கும், கஷ்டத்திற்கும் என்ன பரிகாரம் என்பதைக் கவனித்து, அதற்குத் தகுந்தது செய்ய முன் வர வேண்டாமா?

 

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *