அமெரிக்க – சீன வர்த்தகப் போர் அமெரிக்க பொருட்களின்மீதான வரியை 125 சதவீதமாக உயர்்த்திய சீனா

Viduthalai
3 Min Read

பெய்ஜிங், ஏப்.12 அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125 சதவீ தம் ஆக உயர்த்தி சீனா அறிவித்துள்ளது.

பரஸ்பர வரி
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ஆம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், அய்ரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது.

10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ஆம் தேதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9-ஆம் தேதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன.
இந்நிலையில், ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கான சீனாவின் பதிலடியாக இது அமைந்துள்ளது என சீன வர்த்த அமைச்சகம் அறிவித்தது. இதை கடுமையாக கண்டித்த அமெரிக்கா, 24 மணி நேரத்தில் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று சீனாவுக்கு கெடு விதித்தது.
அமெரிக்காவின் இந்த அச் சுறுத்தலை சீனா நிராகரித்தது.

இதையடுத்து, சீனா மீது 104 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது. மேலும், சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும் என்றும், பிற நாடுகளு டனான பேச்சுவார்த்தைகள் உடனடி யாக நடைபெறும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித் தார்.
அமெரிக்காவின் இந்த வரி உயர்வைக் கண்டித்து சீனா, அமெ ரிக்கப் பொருட்களுக்கு 84 சதவீத இறக்குமதி வரியை விதித்தது. சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா சீனப் பொருட் களுக்கான இறக்குமதி வரியை 125 சதவீதம் ஆக உயர்த்தியது. மேலும், வரியை 125 சதவீதத்தில் இருந்து 145 சதவீதம் ஆகவும் உயர்த்தி ட்ரம்ப் அறிவித்தார்.

125 சதவீதம்
இதனால் கடும் அதிருப்தி அடைந்த சீனா, அமெரிக்காவுக்குப் போட்டியாக அந்நாட்டு பொருட் களுக்கான வரியை 125 சதவீதம் ஆக உயர்த்தி உள்ளது.
“சீனா மீது அமெரிக்கா விதித்த அசாதாரணமான வரி உயர்வு, பன் னாட்டு வர்த்தக விதிகள், அடிப்படை பொருளாதார சட்டங்கள் மற்றும் பொது அறிவை கடுமையாக மீறுவதாக உள்ளது. அதிபர் ட்ரம்ப் பின் வரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட உலகளாவிய பொருளாதார கொந்தளிப்புக்கு அமெ ரிக்கா முழு பொறுப்பையும் ஏற்க வேண் டும். தற்போதைய உலகப் பொருளா தாரம், உலக சந்தைகள் மற்றும் பலதரப்பு வர்த்தக அமைப்புகள் கடுமையான அதிர்ச்சிகளையும் கடுமையான கொந்தளிப்பையும் சந்திக்க அமெரிக்காவே காரணம்” என்று சீன வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங், ஒருதலைப்பட்ச பொரு ளாதார நெருக்கடிக்கு ஆளாக்குவதை எதிர்ப்பதில் பெய்ஜிங்குடன் அய்ரோப்பிய ஒன்றியம் கைகோர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பெய்ஜிங்கில் பேசிய அவர், “சீனாவும் அய்ரோப்பாவும் தங்கள் பன்னாட்டு பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் ஒருதலைபட்சமான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கும் நடை முறைகளை கூட்டாக எதிர்க்க வேண்டும். இது சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பன்னாட்டு நியாயத்தையும் நீதி யையும் பாதுகாக்கும்.” என்று தெரிவித் துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *