ஆட்சியில் இருக்கும் போது மட்டுமல்ல, எதிர்கட்சியாக இருந்தபோதே போராடி மாநில உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
செப்டம்பர் 2020இல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 % உள் ஒதுக்கீட்டை 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக அரசு அறிவிக்கிறது அதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்படுகிறது.
மாநில உரிமைகளுக்கு குரல்கொடுக்கும் திமுக ஆட்சியிலேயே இருமாப்போடு இருக்கும் ஆளுநர் அன்று நீட்மூதல், உதய் மின் திட்டம் என தமிழ்நாட்டிற்கு விரோதமாக கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் தலைமேல் காரியம்போது உடனடியாக அறிவித்து ஆணையிட்ட அதிமுக. அதன் தலைமை அனுப்பிய மசோதாவிற்கு ஒப்புக்கொள்வாரா ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் போகவே ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மாணவர்கள் நலன் காக்க 24.10.2020 அன்று போராட்டம் அறிவித்த எதிர்கட்சி தலைவரும் இன்றைய முதலமைச்சருமான தளபதி கிண்டியில் நேரடியாக ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்துகிறார்.
30 அக்டோபர் ஆளுநர் 7.5% உள் ஒதுக்கீடு (வெறும் மருத்துவக்கல்லூரிக்கு மட்டும்) மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கிறார்.ஆட்சிக்கு வந்த பின் அந்த 7.5% இட ஒதுக்கீடு அனைத்து தொழிற்கல்விக்கும் விரிவுப்படுத்துகிறது திமுக அரசு.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநரைக் கண்டித்து இன்றைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய போராட்டங்கள் எத்தனை?
இந்த 10 ,மசோதாவில் ஒன்று அவர்களது கட்சியின் மேனாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெயரை மீனவள பல்கலைக்கழகத்திற்கு வைக்கும் மசோதா.