திண்டுக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மு. ஆனந்த முனிராசன் – பிரியதர்ஷினி ஆகியோரின் இணையேற்பு நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பொன்னாடை அணிவித்தார். தமிழர் தலைவர் அவர்கள் இணையருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நா. கமல் குமார், பொதுக்குழு உறுப்பினர் மு. நாகராஜன், மாவட்ட அமைப்பாளர் பழ. இராஜேந்திரன், வேடசந்தூர் இராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.