சேலம் அரசு அய்.டி.அய்.யில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

viduthalai
1 Min Read

சேலம், ஏப்.11 சேலம் அரசு அய்டிஅய்யில் வேலை வாய்ப்பு திறன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: சேலம் அரசு அய்டிஅய்யில் கடிகார பழுது நீக்கம் தொடா்பான மூன்றுமாத குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சேர விருப்பம் உள்ள பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், வரும் 18-ஆம் தேதிக்குள் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயிற்சிபெற்று பயன் பெறலாம்.

சோ்க்கைக்கு அசல் ஆவணங்களான மாற்றுச்சான் றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை மற்றும் 4 புகைப்படங்களுடன் அணுகி விவரம் பெறலாம். இப்பயிற்சிக்கு நேரடியாகவோ அல்லது கூகுள் படிவம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

இதேபோல, 16 மணி நேரம் கொண்ட காா் பராமரிப்பு அடிப்படை பணிமனை குறுகியகால பயிற்சி வழங்கப்பட வுள்ளது. இப்பயிற்சி 4 நாள்களுக்கு தலா 4 மணி நேரம் வீதம் நடைபெறும். இதற்கான கட்டணமாக ரூ. 1000 நிா்ணயிக்கப் பட்டுள்ளது. 18 வயது நிறைவுபெற்ற பயிற்சி பெற விருப்பம் உள்ளவா்கள் உடனடியாக தொழிற் பயிற்சி நிலையத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *