திசை திருப்பும் திரிநூல் ‘துக்ளக்’

Viduthalai
1 Min Read

அரசியல்

-‘துக்ளக்’ 12.7.2023

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை வேண்டும் என்பது இந்து மதத்தில் உள்ள அனைவருக்குமான மனித உரிமை பற்றியது. பார்ப்பனர்கள் மட்டும்தான் அர்ச்சகராகலாம் – மற்றவர்கள் கர்ப்பக் கிரகத்திற்குள் சென்றால் கர்ப்பக் கிரகமும், கடவுளும் தீட்டுப்பட்டு விடும் என்று சொல்லுவது ஜாதி ஆணவக் கொழுப்பு!

ஜாதி ஒழிப்பு இயக்கமான திராவிடர் கழகம் இந்த மனித உரிமையின் அடிப்படையில்தான் போராடியது.

நாத்திகத்திற்கும் இந்து மதத்தில் இடம் உண்டு என்பது தெரியுமா ‘துக்ளக்’குகளுக்கு?

கடவுள் மறுப்பு இயக்கமான திராவிடர் கழகத் தோழர்கள் அர்ச்சகராக விண்ணப்பம் போடப் போவதில்லை. இதனை தந்தை பெரியார் காலத்திலேயே திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

எல்லாம் தெரிந்தும் திசை திருப்பவும், விஷமப் பிரச்சாரம் செய்யவும் திரிநூல்கள் பூணூலை முறுக்கிக் கொண்டு முண்டா தட்டுவது பரிதாபமே!

கொள்கை என்பது வேறு – எல்லோருக் குமான மனித உரிமை என்பது வேறு என்று முத்தமிழ் அறிஞர் கலைஞரும் சொன்னதுண்டே! கோயில் சிலைகள் திருட்டில் அதிகம் சம்பந்தப்பட்டவர்கள் அர்ச்சகப் பார்ப்பனர்கள்தான் என்பதைத் ‘துக்ளக்’ உணரட்டும்! 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *